குசும்பன் குழப்படிகாரன்: தனக்கும் அதிரடிப்படை கேட்கிறான்?


தனது தலைவன் சுமந்திரனை தொடர்ந்து யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தனக்கு அதிரடிப்படை பாதுகாப்பு கோர முடிவு செய்துள்ளார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளாதால் தனக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என தான் கோரியுள்ளதாக யாழ்.மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்க்கு கடிதம் மற்றும் அலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் தலைமை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் டாண் தொலைக்காட்சிக்கு ஆதரவாகவும் அங்கயனின் கெப்பிடல் தொலைக்காட்சிக்கு எதிராகவும்  இமானுவேல் ஆனோல்ட் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பின்னணியிலேயே தற்போதைய கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments