நீதிக்காக எழுச்சி கொண்டது யாழ் தேசம்!

சிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பேரணியில், சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்­குற்­றங்கள் தொடர்­பில் அனைத்துலக விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யும், சிறீலங்கா அர­சுக்கு கால அவ­கா­சம் வழங்­கக் கூடாது என­வும் கோரிக்­கை­களை முன்­வைத்தே இன்று சனிக்கிழமை இப்பேரணி நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக சமூ­கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுத்த பேரணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமாகி, பேரணியாக நகர்ந்துசென்று யாழ் முற்றைவெளியில் நிறைவடைந்தது.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் 

- கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும்.
- காலநீடிப்பு தமிழர் இருப்பை ஒழிக்கவா?
- 10 ஆண்டுகள் ஏமாற்றியது போதாதா?
- சர்வதேசமே போர்க் குற்றவாளியைப் பாதுகாக்காதே
- நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்து
- அரசைப் பாதுகாப்பதா? அல்லது மக்களைக் பாதுகாப்பதா? ஐநாவின் உருவாக்கம்
- அரசியல் கைதிகளை விடுதலை செய்
- மனிதப் புதைகுழிகளின் களமா? தமிழர் தாயகம்
போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளைத் தாங்கியவண்ணம் பேரணி முற்றைவெளியை நோக்கி நகர்ந்து சென்றது.











No comments