மூதாட்டி சடலமாக மீட்பு

வடமராட்சி பகுதியை சேர்ந்த மூதாட்டி கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புலோலி கிழக்கை சேர்ந்த சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது 80) எனும் மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மூதாட்டி கடந்த 20 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் அது தொடர்பில் உறவினர்களால் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர். இன்று வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்றையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments