சுழல் காற்றில் சிக்கி 22 பேர் பலி!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் நேற்று சுழல்காற்று வீசியதை அடுத்து. சிறுவர்கள் உட்பட  குறைந்தது 22 பேர் பலியாகியுள்ளனர்.
சுழல்காற்றால் பல வீடுகள் சேதமடைந்தன. சுழல்காற்றுக்குப் பின் ஏற்பட்ட புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
சுமார் 21,000 வீடுகளில் மின்சாரம் தடைபட்டது.
மீட்புப் பணியாளர்கள் அல்லும் பகலும் பாடுபட்டு, கட்டட இடிபாடுகளுக்குள் புகுந்து, உயிர் பிழைத்தவர்களையும் சடலங்களையும் தேடி வருகின்றனர்.
பலியானோர்  எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.  

No comments