திருமலையில் உடைப்பு:செம்மணியிலோ முளைப்பு!


திருகோணஸ்வரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவலிங்கம் இனந்தெரியாதவர்களால் அடித்துடைக்கப்பட்டுள்ளது.

திருகோணேஸ்வரர் ஆலயத்தின் அன்னத மடத்தின் முன்னால் நிறுவப்பட்ட சிவலிங்கத்ததை இனந்தெரியாத நபர்கள் அடித்துடைத்துள்ளனர்.

மகா சிவாத்திரியை முன்னிட்டு அன்னதான மடத்திற்கு முன்னால் பக்கதர்களால் நேற்று சிவலிங்கம் ஒன்று நிறுவபப்ட்டிருந்தது. அச் சிவலிங்கமே இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் அடித்துடைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்.நகரின் நுழைவாயிலான செம்மணியில் புதிய சிவலிங்கம் முளைந்துள்ளது.இன்று காலை  மண் பிட்டியொன்று அமைக்கப்பட்டு  அதன் மேல் சிவலிங்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நந்திக்கொடியும் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

No comments