கையூட்டு மற்றும் ஊழலைத் தடுங்கள்! மட்டக்களப்பில் போராட்டம்!

கையூட்டு மற்றும் ஊழல்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கையூட்டுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில், கையூட்டு மற்றும் ஊழல் அற்ற சமூகத்தினை உருவாக்குவோம் எனும் தலைப்பில் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் இந்த பகுதிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவ ருவதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முறையிட்டுள்ள நிலையில், குறித்த முறைப்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையில் பிரதேச செயலாளர் செயற்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

No comments