நோர்வே வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா விஜயம்

நோர்வேயின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் இரண்டு நாட்கள் பயணமாக அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

எதிர்வரும் மார்ச் 05ஆம், 06ஆம் நாள்களில்  அவர் சிறிலங்காவின் தங்கியிருப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர், சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஆகிய அரச தரப்பு தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

அத்துடன், காணாமல் போனோருக்கான பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக, வணிக சமூகப் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார்.

வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், அங்கு கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளையும் பார்வையிடுவார்.

No comments