தூத்துக்குடியில் வேட்பு மனுவை மீளப்பெற்ற கவுதமன்

இந்திய லோக்சபா தேர்தலில் போட்டியிட துத்துக்குடியில் வேட்புமனுவை தாக்கல் செய்த இயக்குநர் கவுதமன் திடீரென மீளப் பெற்றுள்ளார்.

புதிதாக தமிழ் பேரரசு கட்சி என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார் இயக்குநர் கவுதமன் அக்கட்சி சார்பாக வேட்புமனுச் செய்தார்.

ஏப்பிரல் 18 ஆம் திகதி தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது தேர்தல் அல்ல. ஜனநாயக படுகொலை.

அரசு பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார் பா.ஜ.க கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் தமிழிசை. 

ஆனால் இதை மறைத்து தமிழிசை தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் பெற்றுள்ளனர். எனவே எனது வேட்புமனுவை மீளப்பெறுகிறேன்  பெறுகிறேன் எனத கவுதமன் தெரிவித்துள்ளார்.

No comments