வடமராட்சி மீனவர்கள் இந்திய கடலில் கைதாம்?


இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக கூறி யாழ்.மீனவர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.இந்திய கடலோர காவல்படையினர் கைதாகியவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமனாறு பெரிய கடற்கரையைச் சேர்ந்தவர்களென அறிவித்துள்ளது. 

இவர்களை இருவரையும் நேற்று முதல் காணவில்லை என உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று இந்தியா தமிழகத்தில் இருந்து தொலைபேசி மூலமாக தமது இருப்பை உறுதி செய்துள்ளனர். 

சிவலிங்கம் மோகனராசா மற்றும்  ராசலிங்கம் ராசசிறி ஆகிய இரு மீனவர்களே இந்திய கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்ததாக கைதாகியுள்ளனர்.

No comments