ஜெனீவா வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவில்லை

"ஜெனிவாத் தொடரில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு இலங்கை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது கண்டிக்கப்படவேண்டிய விடயமாகும்.”

இவ்வாறு ஐ.நா. மனித உ ரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் வலியுறுத்தினார்.


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் சுவிஸ் தலைநகரான ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்றது.

இதில் இலங்கை குறித்தான அறிக்கையை எதிர்வரும் 20 ஆம் திகதியே ஐ.நா. ஆணையாளர் அவையில் உத்தியோகப்பூர்வமாக சமர்ப்பிக்கவுள்ளார். எனினும், குறித்த அறிக்கை ஆய்வுக்காக இன்று வெளியானது.

இவ்வறிக்கையில் மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளவை வருமாறு,

”  “2015 ஆம் ஆண்டில் ஜெனிவாத் தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கியதன் மூலம் , கடந்தகால சம்பவங்களிற்கு தீர்வை காணவேண்டியதன் அவசியத்தை – கடப்பாட்டை இலங்கை ஏற்றுக்கொண்டது.

எனினும், இதை நிறைவேற்றுவதற்குரிய தீர்க்ககரமான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியடைகின்றோம். எனவே, இலங்கை தொடர்ந்தும் கண்காணிக்கப்படும்.

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல்,யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களை சர்வதேச சட்டங்களுக்கு உட்படுத்தி விசாரணை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டால் அதனை முன்னெடுக்க வேண்டும்.

நம்பகதன்மை மிக்க உள்ளுர் பொறிமுறைகள் காணப்படாத பட்சத்தில் பொறுப்புக் கூறப்படுவதை உறுதி செய்வதற்காக ஏனைய வழிமுறைகளை ஆராய வேண்டும்.

இலங்கையில் மனித உரிமைகள் நிலவரத்தை கண்காணிப்பதற்காக முழுமையான அலுவலகத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு அழைப்புவிடுக்க வேண்டும்” எனவும் மனித உரிமை ஆணையாளர் மிச்லே பச்செலெட் பரிந்துரை செய்துள்ளார்.

No comments