வீட்டின் சிசிடிவியை அகற்றுங்கள் - ஆவா குழுவால் எச்சரிக்கைக் கடிதம்


யாழ். கொக்குவில் பகுதியில் ஆவாகுழுவால் குறித்த வீட்டின் சிசிடிவி காணொளியை அகற்றுமாறு கூறி எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த கடிதம் இன்று கொக்குவில், ஆடியபாதம் பகுதியை சேர்ந்த செல்வரன்சன் என்பவருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தங்க வீட்டுக்கு முன்னாடி ஈக்கின்ற (வாசலுக்கு முன்னாட்டி) கமராவை தாமதிக்காமல் உடனடியாக கழற்ற்வும், அல்லது வீதி பாக்காமல் உள்ளே பூட்டவும் நம்ம தோழர்கள் சிலர் மாட்டி இருக்கிறாங்க. ஆகவே உடனடியாக மாத்தவும் இந்த எச்சரிக்கை மீறினால் உங்கள் மீது தாக்குதல் விரைவாக நடாத்தப்படும்.”

No comments