நிறைவேறியது மகளின் கனவு சத்யராஜ் பெருமிதம்!

பிரபல தமிழ் நடிகரும் , தமிழின உணர்வாளருமான சத்யராஜின் மகள் திவ்யா தென் இந்தியாவில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணராவர்,
 தந்தையைப் போலவே சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் அவர்  லாப நோக்கமின்றி பணியாற்றி வருபவர் .

தற்போது உலகப் புகழ் தொண்டு நிறுவனமான அக்சயா பாத்ராவின் தூதுவராக பொறுப்பேற்றிருக்கும் இந்தநிலையில்  திவ்யா, கல்வி அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களை சமீபத்தில் சந்தித்து தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவு வழங்க அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் அதற்கு அனுமதியும் வழங்கினார்.

இந்த நிலையில் அக்சய பாத்ரா தொண்டு நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து 25-2-2019- முதல் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குகின்றன. இதன் தொடக்கவிழாவை 25 -௨-2019 அன்றுசென்னை திருவான்மீயூர் அரசு பள்ளியில் ஆளுனர் தொடங்கி வைத்தார்.பொதுவாக அனைவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது, குறிப்பாக குழந்தைகளுக்கு காலை உணவு ஆரோக்கியமானதாக இருந்தால்தான் அன்றைய நாள் முழுவதும் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்பதே திவ்யாவின் கனவாக இருந்தது. திவ்யாவின் இந்த கனவு 25 -2-2019 அன்று
முதல் நிறைவேறியுள்ளது.எனவே தனது மக்களின் சாதனை கனவை பாராட்டி மகிழ்ந்து ஊக்கப்படுத்தியுள்ளார் நடிகர் சத்யராஜ் .

No comments