சூறையாட வடக்கு வந்த புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம்?


வடக்கின் வளங்களை சூறையாடும் நடவடிக்கைகளினை துரிதப்படுத்த ஏதுவாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியக உபகாரியாலயம் வவுனியா மாவட்டச்செயலகத்தில் நேற்று (08) அதன் பணிப்பாளர் அசேல இத்தவெலவினால் திறந்து வைக்கப்படடுள்ளது.

தமிழீழத்தின் புல்மோட்டை வடமராட்சி கிழக்கு பகுதிகளில் கனிய மணல் அகழ்வு உள்ளிட்ட வர்த்தகத்தில் பின்னணியில்  புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகமேயுள்ளது.

இந்நிலையில் குறித்த காரியாலயம் நீண்டகாலமாக அனுராதபுரத்தில் இயங்கி வந்த நிலையில் தற்போது  வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்டச்செயலாளர் ஐ.எம்.கனீபா, உதவி மாவட்ட செயலாளர் திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர

No comments