கைவிடப்பட்டது தாதியர் போராட்டம்!

தாதியர்களுக்கு எதிராக பொய்யான தகவல்கள் வெளியிடப்படுவதைக் கண்டித்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் தவறான உறவில் ஈடுபட்டனர் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதில் எவ்வித உண்மைகள் இல்லை. இதை ஊடகங்கள் ஊடாக வைத்தியசாலை பண்ணிப்பாளர் தெளிவு படுத்த வேண்டும் என்று தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடடனர்.

வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, ஊடகங்களை அழைத்து தாதியர்கள் மீதான குற்றச் சாட்டுக்களில் எவ்வித உண்மைகளும் இல்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து தாதியர்களின் போராடடம் கைவிடப்பட்டது.

No comments