சிறீதரன் அரசுடன் கோபித்துக்கொண்டாரா?


ரணில் அரசு தொடர்பில் நம்பிக்கையுடன் எம்.ஏ.சுமந்திரன் காத்திருக்க அவரது கட்சியை சேர்ந்த சிறீதரனோ கிளிநொச்சியில் நாட்டப்பட்டிருந்த தனது அரச அமைச்சர்களுடனான தனது படத்தை மூடி வர்ணம் பூசியுள்ளார்.

கிளிநொச்சியில் பொருத்த்பட்டிருந்த குறித்த பெயர்பலகையில் மைத்திரி,ரணில்,விஜயகலா வரிசையில் சிறீதரனின் படமும் இணைக்கப்பட்டிருந்தது.

குறித்த படம் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் தனது படத்தை விளம்பரப்பலகையில் அழித்திருந்தார்.

இதனிடையே அவரது கட்சி சகாவான சுமந்திரனோ புதிய அரசமைப்பை இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன்றன. தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, அடுத்த நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்றுவதற்கான கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவென தெரிவித்துள்ளார்.

பிரதமர் இப்படிச் சொல்லிவிட்டார், ஜனாதிபதி அப்படிக் கூறிவிட்டார் என்பதை வைத்து நாம் கணிப்புக்களை மேற்கொள்ளமுடியாது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தமது அரசியல் நிலைப்பாடுகள், இருப்புகள், பாதுகாக்கவேண்டியவைகள் எல்லாம் இருக்கும்.

இது அரசியல். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் அவர்களும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். நாட்டுக்காக இதனைச் செய்து முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு வருமெனவும் சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments