கள்ளச் சாராயம் குடித்து 93 பேர் பலி!

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்ததால் குறைந்தது 93 பேர்  வரை பலியாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன! மேலும் சுமார் 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் குடித்த கள்ளச் சாராயத்தில் நச்சுப்பொருள் கலந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

10 நிமிடத்திற்கு  ஒருவர் கள்ளச் சாராயம் அருந்திய காரணத்தினால் மடிவதாக அஸ்ஸாம் மாநிலத்தின் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா (Himanta Biswa Sarma) ராய்ட்டஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.


No comments