திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் புறக்கணிப்புப் போராட்டம்


நல்லூர் பிரதேச சபையின் அடாவடியை கண்டித்து திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் வியாபார  புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுக்கின்றனர்.

திருநெல்வேலி பொது சந்தையில் நடைபாதைக்கு இடையூறாக ஒரு வியாபாரி நடந்து கொண்டார் என்பதற்காக அவருடைய வியாபார உரிமத்தை தற்காலிகமாக தடுத்துள்ள நல்லூர் பிரதேசபை, அவர் மீது விசாரணை ஒன்றிணையும் மேற்கொண்டுள்ளது.

நிலையில் அந்த வியாபாரி மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அநியாயமானது என்பதுடன், நல்லூர் பிரதேசசபை அடாவடியாக நடந்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டியே திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை புறக்கணித்து இன்று காலை தொடக்கம் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

வியாபாரிகளின் இந்தப் போராட்டத்தால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்பட்டதுடன், தமது வியாபார நோக்கத்துக்காக மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களும் பாதிக்கப்பட்டனர்.




No comments