மோடியைச் சந்தித்தார் சந்திரிக்கா


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

புதுடெல்லியில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாடு-2019 இல் பங்கேற்க புதுடெல்லி சென்றுள்ள நிலையிலேயே சந்திரிகா குமாரதுங்க இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொட்பான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

No comments