மைத்திரி யாழ் வர மாட்டாராம் !!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண வருகை திடீரென போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் உள்பட உரிய துறைகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் கிராம அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் கிராம்ம் ஒன்றில் அந்த திட்டத்தை ஆரம்பித்துவைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்பார் என்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த்து.

இந்த நிலையில். அவரது யாழ்ப்பாண வருகை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு கோப்பாய் உள்ளிட்ட சில பகுதிகளில் பொலிஸ் பதிவு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments