அரியாலையில் வீடு புகுந்து தாக்குதல் - வாகனங்கள் எரிப்பு




யாழ்.அாியாலை- நாயன்மாா்கட்டு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் முகங்களை துணியால் க ட்டிக் கொண்டு நுழைந்த 6 போ் கொண்ட வாள்வெட்டு குழு வீட்டிலிருந்த வாகனங்களை கொழுத்தியுள்ளதுடன், வீட்டையும் அடித்து நொருக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, சற்றுமுன்னா் குறித்த வீட்டுக்குள் புகுந் த வாள்வெட்டு கும்பல் வீட்டிலிருந்தவா்களை சரமாாியாக தாக்கியதுடன், வீட்டு ஜன்னல்களை அடித்து நொருக்கியதுடன், வீட்டிலிருந்து வாகனங்களை அடித்து சேதப்படுத்தி, வாகனங்களை தீயிட்டு கொழுத்தியுள்ளனா். இதில் ஹயஸ் வாகனம் முற்றாக எாிந்து நாசமாகி யுள்ளதுடன், 3 மோட்டாா் சைக்கிள்கள் அடித்து நொருக்கப்பட்டு வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலும் நடாத்தப்பட்டிருக்கின்றது.



சம்பவம் இடம்பெற்றபோது வீட்டு கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் வாள்வெட்டு கும்பல் வீ ட்டு மதிலால் பாய்ந்து வீட்டுக்குள் வந்து தாக்குதல் நடத்தியுள்ளனா்.

No comments