பருத்தித்துறைக் கடலில் இருவர் கைது - 86 கிலோ கஞ்சா மீட்பு

யாழ். வடமராட்சி, பருத்தித்துறைக் கடற்பரப்பில், 85 கிலோ கேரளக் கஞ்சாவுடன் இரண்டு பேர் காங்கேசன்துறைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

படகு ஒன்றில் இரண்டு பொதிகளில் கட்டப்பட்ட நிலையில் இந்தக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைதானவர்களைப் பொலிஸாரிடம் ஒப்படைத்து நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கடற்படையினர் தெரிவித்தனர்.

No comments