ஏ9 நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டம்! போக்குவரத்துக்கள் முடங்கின!

வவுனியாவில் ஏ9 நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பகுதியில் அகற்றிய குப்பைகளை பிரதேச சபை துப்பரவுப் பணியாளர்கள் பம்பைமடுவில் வழமைபோன்று கொட்டுவதற்கு  பம்பைமடுவில் மீட்குடியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களால் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி குப்பை வாகனங்களை அனுமதிக்காததால் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தை வவுனியா பிரதேச சபை உறுப்பினர்களும் துப்பரவுப் பணியாளர்களும் இணைந்து நத்தியுள்ளனர்.

இவர்களின் வீதிமறியல் போராட்டத்தினால் ஏ9 நெடுஞ்சாலைக்கு குறுக்கே குப்பைகளுடன் இருந்த உளவூர்த்திகளை சாலைக்கு குறுக்கே நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையை மறித்து குறுக்கே இந்தபடி போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதனால் ஏ9 நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டன.

அத்துடன் பிரதேசசபை உறுப்பினர்கள் வவுனியா அரசாங்க அதிபரிடம் சென்றும் இப்பிரச்சினையை முறையிட்டுள்ளனர்.




No comments