முடியவே முடியாது:சபாநாயகர் கரு?
சம்பிரதாயங்களிற்கு உட்பட்டே எதிர்க்கட்சி தலைவரை நியமித்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறித்தது தொடர்பாக இரா.சம்பந்தன் இன்று
நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். அதை தொடர்ந்து கருத்து
தெரிவித்தபோதே, சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியும், எதிர்க்கட்சி தலைவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக
இருந்தது நாடாளுமன்றத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது என்பதையும் சபாநாயகர்
சுட்டிக்காட்டினார். டி.பி.விஜயதுங்கா ஜனாதிபதியாக இருந்தபோது, ரணில்
விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவராகவும், சந்திரிகா ஜனாதிபதியாக
இருந்தபோது, மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராக இருந்ததையும் சபாநாயகர்
சுட்டிக்காட்டினார்.
Post a Comment