யாழில் ஒஸ்லோ பிரதி மேயர்! மகளிர் அமைப்புகளுடன் சந்திப்பு!

நோர்வே – ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணத்துக்கும், மகளிர் அமைப்புக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.

பெண் தலைமைத்துவம், பெண்களின் அரசியல் பிரவேசம், ஈழத் தமிழர்களின் போருக்குப் பின்னரான நிலைப்பாடு போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இலங்கை கொள்கைகளுக்கான பேரவையின் ( Centre for Public Policies) ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது.

இதில் வட மாகாணத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments