புளோரிடா சென்றடைந்த மன்னார் மாதிரிகள்?


மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக எடுத்துச்செல்லப்பட்டு அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ஆய்வகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன்  பரிசோதனைக்கு உட்படுத்த  அமெரிக்காவின் புளோரிடாவுக்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த புதன் கிழமை (23) மன்னார் நீதிமன்றத்தில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மன்னார் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய மன்னாரிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இவ் பொதியானது நேரடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதைகுழி அகழ்வுப்பணிக்கு பொறுப்பான சட்டவைத்திய அதிகாரி சட்டவைத்திய நிபுணர் சமிந்த ராஐபக்சவிடம் விமான நிலையத்தில் வைத்து கையளிக்கப்பட்டிருந்தது.

குறித்த மாதிரி எலும்புக்கூடு அடங்கிய பொதி சட்டவைத்திய நிபுணர் சமிந்த ராஐபக்சவின் பொறுப்பிலே எடுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சார்பில் ஆஐராகிய சட்டத்தரனி வி.எஸ்.நிரஞ்சன் , காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக பணிப்பாளர் மிராக் ரஹீம் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தனர்.

நேற்றைய தினமான 25ம் திகதி மாதிரிகள் புளோரிடாவிலுள்ள ஆய்வுகூடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

No comments