சூடுபிடிக்கின்றது கேப்பாபுலவு போராட்டம்!


முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்கள் இன்று  இராணுவ முகாமுக்கு முன்பாக   எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், கேப்பாபிலவு இராணுவ முகாமின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இராணுவ முகாம் அமைந்துள்ள காணி, தங்களுடையது என்றும், அதனை உடனடியாக   திருப்பித்தருமாறு கோரி அப்பகுதி மக்களால்   ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற நிலையில்  இன்று (26) தங்கள் நிலங்களை மீளக்குமாறு கோரி  அவர்கள்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே பொலிஸார், வீதிதடுப்புகளை அமைத்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், இராணுவ முகாமுக்குள் உள்நுழையாதவாறு தடுத்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

No comments