வல்வெட்டித்துறையில் 118 கிலோ?


யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியிலிருந்து 118 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் கடற்படையினரால் இன்று (07) அதிகாலை  மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் கடற்படையினரால் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் கஞ்சா பொதிகளை பருத்தித்துறை நீதிமன்றில் ஒப்படைப்பதுக்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

No comments