கூரேயினை கைவிட்டு இராகவனிடம் ஜக்கியமானோர்?


வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் கூரே வரவேண்டுமென போராட்டங்கள் நடத்தியவர்கள் அதனை ஓராமாகப்போட்டுவிட்டு புதிய ஆளுநரிடம் சரணாகதியாகியுள்ளனர்.அதிலும் சிலர் நேரடியாக பலாலி விமான நிலையத்திற்கு ஓடிச்சென்று மாலை மரியாதையுடன் வரவேற்றுள்ளனர்.

கொழும்பில் புதிய ஆளுநர் இலங்கை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டிருக்கையில் முன்னைய ஆளுநராக ரெஜினோல்ட் கூரே வரவேண்டுமென போராட்டம் நடத்திக்கொண்டிருந்த டெலோ முக்கியஸ்தரான கணேஸ் வேலாயுதம் முன்னாள் யாழ்.பல்கலைக்கழக முணைவேந்தர் மோகனதாஸ் சகிதம் பலாலியில் போய் வரவேற்றவர்களில் முதன்மையானவர்.

அதே போன்று முன்னாள் ஆளுநரது வலது கரமாக இருந்த செவ்வேள் என்பவரும் அவ்வாறு பலாலி போய் ஜக்கியமாகியிருந்தார்.

இதேவேளை ஆளுநரிடம் இரவிரவாக ஓடிச்சென்று போட்டுக்கொடுப்பதில் முன்னிற்கும் சீ.வீ.கே.சிவஞானம்,சி.தவராசா ஆகியோரும் ஆளுநரை அலுவவலகத்தில் வரவேற்றிருந்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரும் புதிய ஆளுநரை வரவேற்க ஓடோடி சென்றிருந்ததாக தெரியவருகின்றது.

No comments