காவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வணக்க நிகழ்வு -யேர்மனி

யேர்மனி டீசில் டோப் நகரத்தில் காவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வணக்க நிகழ்வு19.01.2019 சனிக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.ஆரம்ப நிகழ்வாக டீசில் டோப் நகரில்
தமிழீழத் தேசியக்கொடியேற்றத்துடன்  மலர்மாலை கேணல் கிட்டு அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு அணிவிக்கப்பட்டது.தொடர்ந்து சுடர் வணக்கத்தினை வருகை தந்திருந்த மக்கள் உணர்வு பூர்வமாகச் செலுத்தினார்கள்.


தொடர் நிகழ்வாக ஒருங்கிணைப்பு குழு பொருப்பாளர் சிறப்புரை இடம்பெற்றது, தொடர்ந்து பல கலை நிகழ்வுகளுடன்  நிகழ்ந்தது இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் இனிதே நிறைவுபெற்றது.

No comments