ரணிலே பிரதமர்: ஐக்கிய தேசிய முன்னணி விடாப்பிடி!


ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெறவுள்ள சந்திப்பில் அறிவிக்கப்படுமென கூட்டு கட்சிகள் தீர்மானித்துள்ளன.

எனினும் ரணிலை பிரதமராக்கப்போவதில்லையென தெரிவித்துள்ள மைத்திரி அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் தனது பதவியை ராஜினாமா செய்து விடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜனாதிபதி தனது வர்த்தமானி அறிவிப்பினை விலக்கிக்கொள்ளப்போவதில்லையென அறிவித்துள்ள நிலையில் நிலமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments