இரணைமடுவில் இளைஞன் பலி!


கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்துள்ள நிலையில் நீர் பாயும் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டகப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் இருந்து இரணைமடு குளத்தை பார்வையிட சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவுடன் சென்ற இளைஞனே உயிரிழந்தவராவர்.

கிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் பலியாகியுள்ளார்.யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய என். டிலக்சன் எனும் மாணவனே பலியாகியுள்ளார்.

இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 36அடியினை தாண்டியுள்ள நிலையில் அது வான் பாய்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. 

No comments