தேர்தல் அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டேன்

நான் தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டேன். இனி தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை என வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

வடமாகாணசபையின் பதவிக்காலத்தில் மக்களிற்கு உருப்படியாக அவர்கள் எதையும் செய்யவில்லை. அடுத்த தேர்தலில் தெரிவாகும் 38 உறுப்பினர்களாலும் மக்களிற்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. இனிமேல் தேர்தல்களில் போட்டியிடும் எண்ணமில்லை. அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுபெற்றுவிட்டேன்.

இனிவரும் காலங்களில், கடந்த மாகாணசபையை விட மோசமானவர்களே சபையில் இருக்க சந்தர்ப்பம் உள்ளது. இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால், அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு தெரிவானவர்களையும், அவர்களின் செயற்பாடுகளையும் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது என தெரிவித்துள்ளார்.

No comments