அரசியலமைப்பை மீறிய சுமந்திரனின் பதவி பறிபோகும் அபாயம்


தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின்  பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் இரட்டை பிரஜாவுாிமை கொண்டவா் என்ற தகவல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இரட்டைக் குடியுரிமை கொண்டிருப்பதாகவும் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யக்கோரி நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் மகிந்த அணியினர் தெரிவித்திருந்தநிலையில் குறித்த மூவரில் சுமந்திரனும் ஒருவர் என்ற தகவல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவிடம் இது தொடர்பில் வினவிய போது, இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனுக்கு இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான பிரச்சினை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருந்த என்பவரே முதன் முதலில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் பொதுஜன பெரமுன தாங்கள் கட்சியில் மஹிந்தவுக்கு உறுப்புரிமை வழங்கவில்லை என கூறினால் அந்த பிரச்சினை அத்துடன் நிறைவடைந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக நீதிமன்றம் சென்று அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டபோதும் இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்த சுமந்திரன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரகசியமான முறையில் குறித்த விடையத்தை மறைத்து அனைவரையும் ஏமாற்றிவந்திருந்தமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் அரசியலமைப்பில் இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றிருக்க தகுதியற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments