காவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது!


வவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து இலங்கை காவல்துறை வேட்டையாடிவருகின்றது. அவ்வகையில் மற்றுமொரு முன்னாள் போராளி சந்தேகநபராக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 4.30 மணியளவில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு தலைவரொருவரென அடையாளங் காணப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

40 வயதுடைய இவர் கன்னங்குடா பகுதியைச் சேர்ந்தவரென்றும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 20 முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது நெருக்கமானவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன் இரு முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments