வவுனியா வாகன விபத்தில் ஆறு பேர் காயம்

வவுனியாவில் சொகுசு வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹெப்பிட்டிக்கொலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா - திருகோணமலை வீதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சொகுசு வாகனத்தில் சென்ற 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஹெப்பிட்டிக்கொலாவ பொலிஸ் பிரிவில் 13ஆம் கட்டைப்பகுதியில் மாலை 4.30மணியளவில் அதிகவேகம் காரணமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணம் மேற்கொண்டவர்களில் 6பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>

No comments