வியாழேந்திரனை கைவிட்ட கிழக்கு!


எந்த வியாழேந்திரனை தலையில் தூக்கி கொண்டாடிய கிழக்கு ஊடகங்கள் முற்றாக அவரை துரோகியாக்கி கைவிட்டுள்ளன.கடந்த காலங்களில் தனது ஆதரவு கிருஸ்ணா எனும் நபர் ஊடாக பணத்தை அள்ளி வீசி ஊடகங்களில்  தன்னை முன்னிலைப்படுத்துவது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அமைச்சு பதவிக்காக கட்சி தாவிய சா.வியாழேந்திரனின் உத்தியாகும்.

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் தராகி சிவராமிற்கு நினைவேந்தலை கொலையாளி புளொட் அமைப்பின் வியாழேந்திரனிடம் காசு வாங்கி அதே கிருஸ்ணா நடத்தி அம்பலமாகியிருந்தார்.எந்த காந்தி பூங்காவில் அவர் அரசியல் நோக்கத்துடன பரப்புரைகளை செய்தாரோ அதே மட்டக்களப்பு காந்தி பூங்காவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.

போராட்டகாரர்கள் வியாழேந்திரன் மட்டக்களப்பு மண்ணில் காலடி எடுத்து வைத்தால் செருப்பு மாலை அணிவிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

30 கோடிக்கு விலைபோன வியாழேந்திரன் இனியும் வேண்டாம், மட்டக்களப்பு மக்களின் மானத்தை போக்கிய அமலுக்கு செருப்பு மாலை அணிவிப்போம் போன்ற பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தார்கள்.

இதனிடையே கிழக்கு தற்போது சூறையாடப்படுவதாக தெரிவித்திருப்பதுடன் மஹிந்த ஆதரவுடன் கிழக்கினை பாதுகாக்க தான் களமிறங்கவுள்ளதாக  வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments