பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணிலுக்கு பிரதமர் பதவி கிடைக்காது


நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும், அவருக்கு நாங்கள் பிரதமர் பதவியை வழங்கமாட்டோம் என்று சூளுரைத்துள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

“ நாடாளுமன்றம் கூட்டப்பட்டிருப்பதால், பெரும்பான்மையை காண்பிப்பதற்கு சாத்தியம் இல்லை.

சிறிலங்கா அதிபருக்கு பிரதமரை நீக்கும் அதிகாரம் உள்ளது, அல்லது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்து,  பெரும்பான்மை வாக்குகளின் மூலம் நிறைவேற்றி அகற்ற முடியும்.

ஆனால், அரசியலமைப்பில் எந்த இடத்திலும், நாடாளுமன்றப் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் தான் பிரதமர் பதவியைப் பெற முடியும் என்று கூறப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments