புகையிரதத்தில் மோதுண்டு யாழ் பல்கலைக்கழக மாணவன் பலி


யாழ். சுன்னாகம் பகுதியில்  புகையிரதத்தில் மோதுண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன் (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தற்கொலைச் சம்பவமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

எனினும் சம்பவத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை. இச் சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments