ரணில் கோத்தா சந்திப்பு!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்குமிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று மாலை (01) அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் விசேடப் பிரதிநிதியாகவே கோட்டா குறித்த சந்திப்பில் பங்கேற்றார் என்றும், அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பிரகாரமே மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்றார். எனவே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கமுடியாமல்போனால் பதவி விலகுவதற்கும் தயாராகவே இருப்பதால், எதிர்வரும் 5 ஆம் திகதி இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வைக்காணலாம்” என்றும் கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய ஆதரவு தம்மிடம் இருப்பதாக கூறியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயகத்தின் பிரகாரம் மாற்றம் நடைபெற்றால் அதை ஏற்பதற்கு தான் தயாராகவே இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

No comments