ஜனாதிபதியை சுமந்திரன் ஒருமையில் பேசியது தவறு - சித்தார்த்தன்
யாழில் உள்ள தனது இல்லத்தில் இன்று (05) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியாவில் நேற்று (04) நடைபெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றும் போது ஜனாதிபதியை ஒருமையில் விளித்து உரையாற்றி இருந்தார்.
எது எப்படி இருந்தாலும் நாட்டின் ஜனாதிபதியை அவ்வாறு விளித்து இருக்க கூடாது. சரியோ பிழையோ அவர் நாட்டின் ஜனாதிபதி. அரசியல் ரீதியாக அவருடன் கருத்து மோதல் ஏற்படலாம். ஆனால் கீழ்த்தரனமான வார்த்தைகளால் பேசியதை ஏற்க முடியாது” என தெரிவித்தார்.
Post a Comment