நாடாளுமன்றத்தினுள் நுழைந்து தாக்குதல் நடத்திய பப்புவா நியூகினியா படையினர்

பப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் ஆயுதப்படையினர், காவல்துறையினர் மற்றும் சிறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

நாடாளுமன்றத்தில் நுழைந்த படையினர் அங்கிருந்த மேசை, கதிரைகள், சாரளரக் கண்ணாடிகள் என அனைத்தையும அடித்து நொருக்கியுள்ளனர்.

அண்மையில் பப்புவா நியூகினியாவில் ‘அபெக்’ என்று அழைக்கப்படுகிற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதற்காக அவுஸ்ரேலியா, அமொிக்கா, நியூசிலாந்து என வெளிநாடுகளிலிருந்து அந்நாட்டுப் படையினர் வரவழைக்கப்பட்டிருந்திருந்தனர்.

பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட படையினருக்கு கொடுப்பனவு கொடுக்காதையிட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

#Papua New Guinea’s Parliament #Papua New Guinea



No comments