தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் - பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

வட­கி­ழக்கு தமிழ் மக்­க­ளின் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டா­மல் நாட்­டின் பிரச்சினை தீர்க்­கப்­ப­டாது. தமிழ் மக்­க­ளுக்கு சுயாட்சி வழங்கப்படவேண்­டும் என சிறீலங்காவுக்கான பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரி­வித்­துள்­ளார்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கத்­தோ­லிக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் களைச் சந்தித்து உரையாடியபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.

சந்திப்பில் நாட்­டில் எழுந்­துள்ள அர­சி­யல் நெருக்­கடி தொடர்­பில் ஐ.தே.க. உறுப்பினர்கள் கர்தினா­லுக்கு விளக்­க­ம­ளித்­துள்­ள­னர். இதனைத் தொடர்ந்து கர்தினால் கருத்துத் தெரிவிக்கையில்:

ஐ.தே.க. ஆட்­சி­யில் ஆட்­சி­யா­ளர்­கள் மக்­க­ளு­டன் நட்­பு­ற­வாக இருந்­தது குறைவு என்று கூறியுள்ளார். வடக்கு மற்­றும் கிழக்கு மாகாண தமிழ் மக்­க­ளின் பிரச்­சினை தீர்க்­கப்­பட வேண்­டும். அவர்­க­ளின் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டா­மல் நாடு முன்­னேற முடி­யாது.

அவர்­க­ளும் இலங்­கை­யர்­கள் என்று உண­ர­வேண்­டும். அவர்­கள் அப்­படி நினைக்க வேண்­டு­மா­யின் சுயாட்சி வழங்­க­வேண்­டும். இது தொடர்­பில் சிங்­கள மக்­கள் மத்­தி­யில் இருக்­கின்ற சந்­தே­கம் தீர்க்கப்­பட வேண்­டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

#Malcolm Ranjith

No comments