தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் - பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் நாட்டின் பிரச்சினை தீர்க்கப்படாது. தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கப்படவேண்டும் என சிறீலங்காவுக்கான பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் களைச் சந்தித்து உரையாடியபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.
சந்திப்பில் நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் ஐ.தே.க. உறுப்பினர்கள் கர்தினாலுக்கு விளக்கமளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கர்தினால் கருத்துத் தெரிவிக்கையில்:
ஐ.தே.க. ஆட்சியில் ஆட்சியாளர்கள் மக்களுடன் நட்புறவாக இருந்தது குறைவு என்று கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் நாடு முன்னேற முடியாது.
அவர்களும் இலங்கையர்கள் என்று உணரவேண்டும். அவர்கள் அப்படி நினைக்க வேண்டுமாயின் சுயாட்சி வழங்கவேண்டும். இது தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
#Malcolm Ranjith
ஐக்கிய தேசியக் கட்சியின் கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் களைச் சந்தித்து உரையாடியபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.
சந்திப்பில் நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் ஐ.தே.க. உறுப்பினர்கள் கர்தினாலுக்கு விளக்கமளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கர்தினால் கருத்துத் தெரிவிக்கையில்:
ஐ.தே.க. ஆட்சியில் ஆட்சியாளர்கள் மக்களுடன் நட்புறவாக இருந்தது குறைவு என்று கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் நாடு முன்னேற முடியாது.
அவர்களும் இலங்கையர்கள் என்று உணரவேண்டும். அவர்கள் அப்படி நினைக்க வேண்டுமாயின் சுயாட்சி வழங்கவேண்டும். இது தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
#Malcolm Ranjith
Post a Comment