வடக்கு பேரூந்துகள் கொழும்பிற்கு: பாடசாலை மூடல்?


வடமாகாண ஆளுநர் நாளை பாடசாலைகளை மூடியமை தீபாவளியால் அல்லவென்பது அம்பலமாகியுள்ளது.மஹிந்த அரசின் "மக்கள் சக்தி" ஆர்ப்பாட்டத்திற்கென போக்குவரத்து சபை பேரூந்துகள் யாழில் கையகப்படுத்தப்பட்டமையால் ஏற்பட்ட நெருக்கடியினை தவிர்க்கவேயென தெரியவருகின்றது. 

யாழ்ப்பாணத்திலிருந்து அரசபோக்குவரத்து பேருந்துகளை அமர்த்தியுள்ள புதிய அமைச்சர்கள் மக்களை ஏற்றி கொழும்புக்கு அழைத்து செல்ல தயாராகி கொண்டிருக்கின்றார்கள்.

இதனால் நாளை உள்ளூர் சேவையில் ஈடுபடும் பேருந்துசேவைகள் மட்டுப்படுத்தப்படலாம். தீபாவளி தினத்தினை முன்னிட்டு நகரங்களுக்கு சென்று கொள்வனவுகளில் ஈடுபடும் மக்களுக்கு புதிய அமைச்சர்கள் இடைஞ்சல்களையே கொடுக்கபோகின்றார்களென சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் பாடசாலை போக்குவரத்து சேவைகளை காரணங்காட்டி பேரூந்துகளை விடுவிக்க அதிகாரிகள் பின்னடித்த நிலையிலேயே தீபாவளியினை காரணங்காட்டி பாடசாலைகளை இழுத்து மூடியுள்ளார் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே. 

No comments