மாவீரர் நாளுக்கு தயாராகும் கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லம்

20.11.2018 இன்று அம்பாறை கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லத்தின் மாவீரர் நினைவேந்தல் செயற்பாட்டுக்குழுவினர் வரும் நவம்பர் 27 மாவீரர் நினைநாளை இம்முறை மிகவும் சிறப்பாக கடைப்பிடிக்க ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளனர்.

நினைவேந்தலுக்கான அனுமதியை காவல்துறையினரிடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இத்துயிலுமில்லத்தில் 800ற்கும் மேற்பட்ட மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#Ampara #Amparai



No comments