பெரும்பான்மையினை நிரூபிக்க ரணில் சவால்!


ஐனாதிபதியால் தன்னை பதவி நீக்க முடியாது என்றும் இயலுமாயின் நாடாளுமன்றத்தைக்கூட்டி பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டட்டும் என சவால் விடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க.காலியிலிருந்து அலரி மாளிகைக்கு சற்று முன்னர் வருகை தந்த பிரதமர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அப்போது அவர் பின்னால் குழுமியிருந்த ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெயவேவா ஜெயவேவா என்று கோசம் எழுப்பியதைக்காணக்கூடியதாக இருந்தது.

இதனிடையே ரணில் விக்கிரமசிங்க தனது கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அவருடன் 50 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூழ்ந்து நிற்க கருத்து தெரிவித்தார். சட்டத்திற்கு முரணான பதவியேற்பு எனவும், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிருபிப்பதாகவும் ரணில் சவால் விடுத்துள்ளார்.

No comments