பிரான்ஸ் மாவீரர் நாள் அனைத்து ஊடகங்களுக்கு விடுக்கும் அறிவித்தல்!

எம் நெஞ்சமெல்லாம் குடியிருக்கும் தமிழீழ தேசத்தின் உன்னத மாவீரர் தெய்வங்களின் தேசிய நினைவெழுச்சி நிகழ்வான ‘ தமிழீழ தேசிய மாவீரர்நாள் 2018.11.27 செவ்வாய்க்கிழமை 12.30 மணிக்கு எழுச்சி பூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது.

இத் தேசிய எழுச்சி நிகழ்வினை தங்களின் ஊடகங்கள் மூலம் வெளிக் கொண்டு வரவேண்டிய தார்மீகப்பொறுப்பு, அனைத்து தமிழர் ஊடகங்களின் முக்கியம் வாய்ந்த வரலாற்றுப் பொறுப்பும், கடமையுமாகும்.

ஊடகர்களுக்கான அனுமதியும், ஆலோசனைகளும், ஏற்பாடுகள் பற்றியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவினால் முற்கூட்டியே தெரியப்படுத்த வேண்டியிருப்பதனால், ஊடகவியலாளர்கள் இதனைக் கவனத்தில் எடுத்து, எதிர்வரும் 20.11.2018 முன்பாக தங்கள் வரவை உறுதிப்படுத்தி அதற்கான அனுமதியை முற்கூட்டியே பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு மாவீரர்நாள் ஏற்பாட்டுக் குழு
தொடர்புகளுக்கு : 01 43 15 04 21 – 0 6 05 79 99 15
அலுவலக முகவரி :  : cctf – 116 rue de belleville -75020paris

No comments