இலங்கை தொடர்பாக ஐநாவில் மற்றுமொரு பிரேரணை


ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 22 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணையை கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரித்தானியா இந்த பிரேரணையை கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதற்கான இராஜதந்திர முயற்சிகளும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரித்தானியா இந்த பிரேரணையை கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக ஜேர்மனி இலங்கை குறித்த பிரேரணையை கொண்டுவருவதில் முன்னின்று செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும் இது தொடர்பில் ஜேர்மனி எந்த விடயத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரித்தரினியா இலங்கை குறித்த பிரேரணையை கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றநிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் மாதங்களில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments