சுமந்திரனிற்கு மனச்சாட்சியிருக்கின்றதா? சங்கரி கேள்வி!

தன்னைக் கொல்ல வந்தவருக்கு இலங்கை ஐனாதிபதியே மன்னிப்பளித்து விடுவித்துள்ளார்.ஆனால் சுமந்திரனோ தன்னை கொல்ல வராத அப்பாவிகளைளைப்பிடித்து சிறையில் அடைத்து வைத்திருக்கின்றார்.

கைதாகியுள்ள அப்பாவிகள் தன்னைக் கொல்ல வந்தது உண்மை என்றால் சுமந்திரன் சத்தியம் செய்ய வேண்டும்.உண்மையில் சுமந்திரனுக்கு மனச்சாட்சியென்று ஏதேனும் இருக்கின்றதாவென வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில் கைதாகியுள்ள அப்பாவிகள் எவருமே ஆயுதங்களை தூக்கமுடியாதவர்கள்.

இருவரிற்கு கைகள் இல்லை.இன்னொருவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றார்.மற்றொருவர் தனது மூன்று வயது குழந்தையின் இதய துவாரத்திற்கான சிகிச்சைக்காக அலைந்து திரிகின்றார்.அத்துடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலும் வாழ்ந்தவர்கள்.

அவ்வாறு அப்பாவிகளை சிறையில் அடைத்துவைத்துள்ள சுமந்திரன் இப்போது தரகர் போன்று உண்ணாவிரதமிருக்கின்ற அரசியல் கைதிகளது விடுதலைக்காக  திரிவதாக நாடகமாடுவதாகவும் அவர் மேலும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

No comments