வசந்த சேனநாயக்க ஏமாற்றிவிட்டார் - சஜித் புலம்பல்
இதுகுறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவர் நேற்றிரவு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.
நேற்றுமுன்தினம் அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த வசந்த சேனநாயக்க, தாம், ஐதேகவின் பிரதமருக்கு மாத்திரமே ஆதரவு அளிப்பேன் என்று கூறியிருந்தார்.
முன்னதாக அவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் சஜித் பிரேமதாச அவரை, சமாதானப்படுத்தி, அலரி மாளிகைக்கு அழைத்து வந்திருந்தார்.
இந்தநிலையில் அவர் நேற்றிரவு, மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில், சுற்றுலா மற்றும் வனவாழ் உயிரினங்கள் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
Post a Comment