மாவீரர் தினத்திற்கு தடையாம்?

மாவீரர் தினத்தன்று, வடக்கில் புலிகளை நினைவுகூர வேண்டாம் எனத் தெரிவித்த இராணு ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து, உறவுகளை நிறைவுகூரத் தடையில்லை எனவும் தெரிவித்தார்.

வடக்கில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில், இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்த கருத்துகள் தொடர்பில், அவர் மேலும் குறிப்பிடுகையில், "யுத்தகாலத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர, வடக்கு வாழ். தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. ஆனால், மாவீரர் தினம் என்ற பேரில் புலிகளை நினைவுகூருவதை அனுமதிக்க முடியாது என்பதே இராணுவத்தின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.

"குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவ்வாறான அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூருவதை அனுமதிக்க முடியாது" என்றார்.

முன்னதாக இராணுவத்தளபதி மகேஸ்சேனநாயக்க மாவீரர் தினத்தை இவ்வாண்டு முன்னெடுக்க அனுமதிக்கப்போவதில்லையென தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments